விரிவாகும் ஆளுமை
1) திருவள்ளுவரை உலகப் புலவர் என்று பாராட்டியவர் யார்?
விடை: ஜி,யு.போப்
2) உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார்?
விடை: தனிநாயகம் அடிகள்
3) தனிநாயகம் அடிகள் தொடங்கிய ——- இதழ் இன்று வரை வெளிவந்து கொண்டிடுருக்கிறது.
விடை: தமிழ்ப் பண்பாடு
4) “படுதிரை வையம் பாத்திய பண்பே” – என்று எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
விடை: தொல்காப்பியம்
5) “பூட்கையில்லோன் யாக்கை போல” – குறிக்கோள் இல்லாதவன் சதைப்பண்டம் போல என்று எந்நூலில் யார் குறிப்பிட்டுள்ளார்?
விடை: நூல் – புறநானூறு
ஆசிரியர் – ஆலத்தூர்கிழார்
6) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” – என்று பாடியவர் யார்?
விடை: கணியன் பூங்குன்றனார்
7) தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் ——– ம் ஒருவர்.
விடை: தனிநாயகம் அடிகள்
அக்கறை
1) கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?
விடை: கல்யாண சுந்தரம்.
2) வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்தில் பங்களிப்பு செய்பவர் யார்?
விடை: கல்யாண்ஜி
3) வண்ணதாசனின் எந்த சிறுகதை 2016 ஆம் ஆண்டு சாகித்ய அகதெமி விருதைப் பெற்றது?
விடை: ஒரு சிறு இசை
4) கல்யாண்ஜி எழுதிய கவிதை நூல்கள் யாவை?
- புலரி
- முன்பின்
- ஆதி
- அந்நியமற்ற நதி
- மணல் உள்ள ஆறு
5) கல்யாண்ஜி (அ) வண்ணதாசன் எழுதிய சிறுகதைகள் யாவை?
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- உயரப் பறத்தல்
- ஒளியிலே தெரிவது
- ஒரு சிறு இசை
6) வண்ணதாசனின் பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ——– பெயரில் வெளியானது.
விடை: சில இறகுகள் சில பறவைகள்
குறுந்தொகை
1) குறுந்தொகை —— நூல்களுள் ஒன்று.
விடை: எட்டுத்தொகை
2) குறுந்தொகையை இயற்றியவர் யார்?
விடை: பாலை பாடிய பெருங்கடுங்கோ
3) பாலை பாடிய பெருங்கடுங்கோ ——- மரபைச் சேர்ந்தவர்.
விடை: சேர மரபு
4) குறுந்தொகை எத்தனை பாடல்களைக் கொண்டது?
விடை: 401
5) குறுந்தொகையை 1915 ஆம் ஆண்டு முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
விடை: சௌரிப்பெருமாள் அரங்கனார்
6) நான்கடி சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்டது ——- ஆகும்.
விடை: குறுந்தொகை
7) பொருத்துக
- நசை – ஆண்யானை
- பிடி – உரிக்கும்
- வேழம் – பெண்யானை
- பொளிக்கும் – விருப்பம்
விடை:
- நசை – விருப்பம்
- பிடி – பெண்யானை
- வேழம் – ஆண்யானை
- பொளிக்கும் – உரிக்கும்
8) பிடிபசி என்பது ——– வேற்றுமைத் தொகை ஆகும்.
விடை: ஆறாம்
9) பெருங்கை, மென்சினை என்பது ——- தொகைகள்.
விடை: பண்புத்தொகைகள்
தாய்மைக்கு வறட்சி இல்லை
1) சு. சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் —— ஊரைச் சேர்ந்தவர்.
விடை: திப்பணம்பட்டி
2) சு. சமுத்திரத்தின் எந்த புதினம் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது?
விடை: வேரில் பழுத்த பலா
3) சமுத்திரத்தின் தமிழக அரசின் பரிசைப் பெற்ற சிறுகதை எது?
விடை: குற்றம் பார்கில்
4) சமுத்திரம் எழுதிய சிறுகதைகள் யாவை?
- வாடாமல்லி
- பாலைப்புறா
- மண்சுமை
- தலைப்பாகை
- காகித உறவு
அணியிலக்கணம்
1) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று – இதில் எந்த அணி வந்துள்ளது?
விடை: உவமை அணி
2) போல, போன்ற உருபுகள் மறைந்து வருவது —— அணி ஆகும்.
விடை: உவமை அணி
3) உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது ——- அணி ஆகும்.
விடை: உருவக அணி
4) இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறுகாலைச் செய் – இதில் என்ன அணி பயின்று வந்துள்ளது?
விடை: உருவக அணி’
5) ஒரு செய்யுளில் வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்தால் அது —— அணி ஆகும்.
விடை: சொல் பின்வருநிலையணி
6) ஒரு செய்யுளில் வந்த பொருளே மீண்டும் மீண்டும் வருவது —— அணி ஆகும்.
விடை: பொருள் பின்வருநிலையணி
7) சொல்லும் பொருளும் மீண்டும் மீண்டும் வருவது —— அணி ஆகும்.
விடை: சொல் பொருள் பின்வருநிலையணி
8) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை – இதில் எந்த அணி வந்துள்ளது?
விடை: சொல் பின்வருநிலையணி
9) அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை – மகிழ்ந்திதழ்
விண் டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை – இதில் எந்த அணி வந்துள்ளது?
விடை: பொருள் பின்வருநிலையணி
10) தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் – இதில் என்ன அணி வந்துள்ளது?
விடை: வஞ்சப்புகழ்ச்சி அணி
11) எல்லா விளக் கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக் கு.
இக்குறட்பா வில் என்ன அணி வந்துள்ளது?
விடை: சொற்பொருள் பின்வருநிலையணி
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1) இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோ டிட்ட சொல்லின்
பொருள் யாது?
அ) கொம்பு ஆ) மலையுச்சி இ) சங்கு ஈ) மேடு
விடை: ஆ) மலையுச்சி
2) தமிழ்ப் புலவரைப் போலவே உரமோச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை
அ) நிலையற்ற வாழ்க்கை ஆ) பிறருக்காக வாழ்தல் இ) இம்மை மறுமை
ஈ) ஒன்றே உலகம்
விடை: ஆ) பிறருக்காக வாழ்தல்
3) வண்ணதாசன் னுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல்
அ) ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல்
விடை: அ) ஒரு சிறு இசை
- யா மரம் என்ப து எந்த நிலத் தில் வள ரும்?
அ) குறிஞ்சி ஆ) மருதம் இ) பாலை ஈ) நெய்தல்
விடை: இ) பாலை
- கேடில் விழுச் செல்வ ம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
அ ) சொல் பின்வருநிலையணி ஆ) பொருள் பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வரு நிலையணி ஈ) வஞ்சப் புகழ்ச்சியணி
விடை: ஆ) பொருள் பின்வருநிலையணி
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் பாடம் -2
1 thought on “ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் பாடம் – 3”
Comments are closed.